12 நாள் முழு ஊரடங்கில் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தத் தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு: தமிழக அரசு
அட்மின் மீடியா
0
ஜூன் 19-ம் தேதி வரும் வெள்ளிகிழமையில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்த முழு ஊரடங்கில் 2 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன 21.06.2020 அன்றும் 28.06.2020 அன்றும் எந்த வித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
20.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல் 22.6.2020 காலை 6 மணி வரையிலும், எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.
என்றும் அதேபோன்று, 27.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி முதல், 29.6.2020 காலை 6 மணி வரையிலும் எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும்
இந்த 2 நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.
மேலும் படியுங்கள்: 4 மாவட்ட முழு ஊரடங்கு அறிவிப்பு - என்னென்ன இயங்கும்...? என்னென்ன இயங்காது...?முழு விவரம்
மேலும் படியுங்கள்: முழு ஊரடங்கு 4 மாவட்டங்களில் ரூ.1000 நிவாரணம்: தமிழக அரசு
அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்