Breaking News

மொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்.......

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியேவும் செல்ல, இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



திருமணத்திற்க்கு செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி



மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு பெற


வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற




வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற



விண்ணப்பிப்பது எப்படி?

நீங்கள் மாவட்டங்களுக்குள் பயணம் செய்ய நினைத்தால், மற்றவை/ others என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

முதலில் மேற்கண்ட லின்ங்கில் உள் நுழைந்து மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்சாவை பதிவிட்டு  சம்பிட் கொடுங்கள் 

அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட்டு கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். 

அடுத்து வரும் விண்ணப்பத்தில் நீங்கள் பயணிக்கும் தேர்வை கிளிக் செய்து கொள்ளுங்கள் 

அடுத்து அதில்  மொபைல் எண் மற்றும் ரகசிய எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பதிவு செய்யவும்.

அடுத்து சாலை வழியாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா அல்லது விமானம்/ அல்லது ரயில் மார்கமாக பயணம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும். தேவையானவற்றை தேர்ந்தெடுக்கவும்

அடுத்து அதில் ஏதேனும் ஒரு காரணத்தை பதிவு செய்ய வேண்டும். கொடுக்கப்பட்ட காரணங்களுக்கான ஆதாரத்தையும் பதிவேற்ற வேண்டும்.திருமண நிகழ்வு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவற்றை சமர்பிக்க வேண்டும். மருத்துவ அவசர நிலை என்றால் மருத்த சான்று அல்லது அது சம்பந்தப்பட்ட ஆவணம், 

அடுத்து பயணிக்கும் வாகனம் எது என்பதை குறிப்பிடவும் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.

அடுத்ததாக எங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்ய வேண்டும்.அதற்க்கான முழு முகவரியையும் பதிவிடுங்கள்

நமது விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், உடனடியாக இபாஸ் குறிப்பு எண்ணுடன் (SMS) மற்றும் (Email) மின்னஞ்சல் அனுப்பப்படும் .

மேலும்  உங்கள் சந்தேகங்களுக்கு அணுக வேண்டிய உதவி எண்கள்
 
1100
 
1800 425 1333 


இந்த அவசரகால போக்குரவரத்து அனுமதிச் சீட்டு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு மையத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 

எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய வீடியோ 

நன்றி சன் நியூஸ் 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback