4 மாவட்டங்களில் 19 ம் தேதி முதல் முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு; முழு விவரம்
அட்மின் மீடியா
0
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு.அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
மேலும் படியுங்கள்: 4 மாவட்ட முழு ஊரடங்கு அறிவிப்பு - என்னென்ன இயங்கும்...? என்னென்ன இயங்காது...?முழு விவரம்
மேலும் படியுங்கள்: முழு ஊரடங்கு 4 மாவட்டங்களில் ரூ.1000 நிவாரணம்: தமிழக அரசு
மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் வழக்கம்போல் இயங்கும்.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.
Tags: தமிழக செய்திகள்