Breaking News

வங்கிகள் வழக்கம் போல் இன்று முதல் செயல்படும்....

அட்மின் மீடியா
0
அனைத்து வங்கிகளும் இன்று 04.05.2020 முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், வங்கிகளிலும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்கிகளின் வேலை நேரம் முன்னதாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதையும் படியுங்க:  வங்கிகளில் பணம் எடுக்க போறிங்களா? முதல்ல இதை படியுங்க புதிய விதிமுறை... நாளை முதல் அமல்

இதன்படி, ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் தற்போது வரை, வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் இருந்து சில தளா்வுகளை அறிவித்துள்ளது. அதில், மாலை 5 மணி வரை, அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. 


இதனால், வங்கிகள் திங்கள்கிழமை (மே 4-ஆம் தேதி) முதல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும்.

இதையும் படியுங்க: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரனுமா! ஆன்லைனில் உடனே விண்ணப்பியுங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் இந்த விதிமுறைகள் பொருந்தாது என மாநில அளவிலான வங்கியாளா்கள் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்லது



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback