Breaking News

வங்கிகளில் பணம் எடுக்க போறிங்களா? முதல்ல இதை படியுங்க புதிய விதிமுறை... நாளை முதல் அமல்

அட்மின் மீடியா
0
வங்கிகளில் பணமெடுக்க மக்கள் கூடுவதை தடுக்க இந்திய வங்கிகள் சங்கம் புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.



அதன்படி பிரதமர் கரீப் கல்யான் 
திட்ட பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 0 மற்றும் 1 உடையவர்கள் மே 4-ம் தேதி பணத்தை எடுக்க வங்கியில் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்.


அதேபோல்வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம்  2 மற்றும் 3 உள்ளவர்கள் மே 5-ம் தேதி தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். 


அதேபோல்வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 4 மற்றும் 5 கடைசி இலக்கங்களை கொண்டவர்கள் மே 6-ம் தேதி தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். 


அதேபோல்வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 6 மற்றும் 7  இலக்கங்களை கொண்டவர்கள் மே 8-ம் தேதி தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். 



அதேபோல்வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கம் 8 மற்றும் 9 இலக்கங்களை  கொண்டவர்கள் மே 11-ம் தேதிதங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். 


இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். 

அதற்குபின் வழக்கம் போல் யார் வேண்டுமானாலும் எந்த தேதியிலும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback