Breaking News

பெண்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் Free Sewing Machine Scheme 2023

அட்மின் மீடியா
0

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்:-


இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்-

1. வட்டாட்சியரிடமிருந்துபெறப்பட்டவருமானச்சான்றுரூ. 72000/- ற்குள்

2.வட்டாட்சியரிடம்பெறப்பட்டஇருப்பிடச்சான்று

3.பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சிசான்று (குறைந்த பட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்) 

4.வயதுசான்று (20 முதல் 40 வயது வரை தகுதி )

5. சாதிச் சான்று

6. விண்ணப்பதாரரின் புகைப்படம் - 2 ( வண்ணபுகைப்படம் – கடவுச்சீட்டு அளவு)

7. விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று

8.ஆதார் அடையாள அட்டை.

மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தென் சென்னை மாவட்ட சமூகநலம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிங்காரவேலர்மாளிகை, 8வது தளம், இராஜாஜிசாலை, சென்னை-01 அலுவலகத்தில் 06. 03. 2023-ற்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. சு.அமிர்தஜோதி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி

மாவட்ட சமூக நல அலுவர்.

மாவட்ட சமூக நல அலுவலகம்,

சென்னை மாவட்டம்,\


தமிழக அரசின் அறிவிப்பை பார்க்க:-


https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/03/2023030171.pdf

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback