300 ஆண்டுகளுக்கு முன்பு 1.5 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் முழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு- ஆழ்கடலில் எடுக்கப்பட்ட வீடியோ
300 ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே 600 பேருடன் கடலில் மூழ்கியது. தற்போது இந்தக் கப்பல் மூழ்கிய இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
1708ல், 'சான் ஜோஸ் கலியன்' என்ற ஸ்பெயின் போர் கப்பல் கொலம்பியா நோக்கி
சென்று கொண்டிருந்தபோது, பிரிட்டன் படைகளின் தாக்குதலில் கடலில் மூழ்கியது.
கடந்த 2015-ல் அந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.எனினும் கொலம்பிய அரசு தங்கப் புதையலுடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பல் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் தங்கத்துடன் மூழ்கிய சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் 2 கப்பல்கள் மூழ்கி இருக்கும் வீடியோவை, ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கப்பல் உள்ளே இருக்கும் விலை மதிப்பு இல்லாத பொருட்கள் காணப்பட்டன. இந்த கப்பலின் பாகங்கள், விலை மதிப்பில்லாத பொருட்கள் பல இப்போதும் 3000 அடி ஆழத்தில் கடலுக்கு கீழே உள்ளன.
அந்த வீடியோவில் சான் ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. அதன் அருகே நீலம், பச்சை நிறங்களில், கடலின் அடியில் சிதறிக் கிடக்கின்ற தங்க நாணயங்கள், மட்பாண்டங்கள் மற்றும் பீங்கான் கோப்பைகள் தெரிகின்றன. தவிர, ஒரு பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் காணப்படுகிறது. இதுதொடர்பாக ஆராய்ச்சி நடப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ பார்க்க:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ