வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
1
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தப் புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதில்...
- விமானம் கிளம்புவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர், சுய அறிவிப்பு படிவத்தை ஆன்லைனில் https://www.newdelhiairport.in/ அனைத்து பயனிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.
- பயனிகள் அனைவரும் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைபடுத்துதல் செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும். அதில் 7 நாட்கள் சொந்த செலவில் முகாமிலும், 7 நாடுகளில் வீட்டிலும் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.
- பயணம் செய்பவர்கள் இந்தியா வந்தடைந்தவுடன் பயணம் புறப்படுவதற்கு முன்பாக பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் சான்றிதழை சமர்பிப்பதன் மூலம், 7 நாட்கள் கட்டண தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு பெறலாம். அவ்வாறு பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட், விமானம் ஏறுவதற்கு குறைந்தது 96 மணி நேரத்திற்குள்ளாக இருக்க வேண்டும். மேலும் நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் மேலே கூறப்பட்டுள்ள ஆன்லைன் போரட்டலில் சமர்ப்பிக்க வேண்டும்.
உட்பட பல விதிமுறைகள் உள்ளன....
மேலும் முழுமையாக படிக்க
#CoronaVirusUpdates#IndiaFightsCorona— Ministry of Health (@MoHFW_INDIA) August 2, 2020
Guidelines issued for international arrivals in supersession of those issued on 24th May 2020. Will be operational from 00.01 Hrs, 8th August 2020.https://t.co/TWFRxnPog5 pic.twitter.com/v5js4F8l4L
Tags: வெளிநாட்டு செய்திகள்
My cancel how do I come India
ReplyDelete