Breaking News

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்: உச்சநீதிமன்றம்

அட்மின் மீடியா
1


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம்

செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒரு ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சிறை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு 



உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார்.

அந்த கருத்து  கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்திருந்தது

மேலும் அவர் தன் கருத்திற்க்கு மன்னிப்பு கேட்டால் தண்டனை கிடையாது என கூறிய உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.


இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும் இல்லாவிடில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது 3 வருடம் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. H Raja BJP சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது

    ReplyDelete