Breaking News

கார்டூனிஸ்ட் வர்மா கைது....

அட்மின் மீடியா
1
முகமது நபி ஸல் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்ட கார்டூனிஸ்ட் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் அருகே கீழ்குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் இவர், சமூக வலைதளங்களில் 'வர்மா கார்ட்டூனிஸ்ட்' என்ற பெயரில் கார்ட்டூன் படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தன் பேஸ்புக் பக்கத்தில் கருப்பர் கூட்டத்தின் பின்னால் இயங்கும் இஸ்லாமிய கும்பலை இஸ்லாமிய தலைவர்களே முன் வந்து கண்டிக்க வேண்டும், இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும் இந்த ஹிந்து துவேஷ கும்பலுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதோடு தாங்கள் ஹிந்துக்களின் பக்கம் நிற்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் உறுதி செய்ய வேண்டும். 

மேலும் கருப்பர் கூட்டம் சேனலுக்கு பின்னால் இயங்கும் ஹாசிப் முகமதுவை அத்தனை ஜமாத்களும் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றி விட்டதாக அறிவிக்க வேண்டும். அதுவும் எண்ணி 24 மணி நேரத்தில் இதை செய்ய வேண்டும்இல்லை என்றால்? முகமது நபியைப் பற்றிய கார்ட்டூன் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் வெளியிடப்படும். என்று மிரட்டல் பதிவிட்டதோடு ஓர் கார்டூனையும் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்

இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' தொகுதி தலைவர் ரியாஸ் அலி, சுரேந்தரை கைது செய்ய கோரி, புகார் அளித்தார். மேலும், அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் சார்பில், முகமது ரஃபி என்பவர், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.இப்புகார்களின் காவல்துறையினர் 153(A), 295(A), 504, 505(I)(C), 505(II) ஆகிய பிரிவுகளின் கீழ் சுரேந்தரை நேற்று (ஜூலை 13) இரவு கைது செய்தனர். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்படுற யூட்யூப் சேனலுக்கு எந்த முஸ்லிம் ஆதரவு அளிக்கிறான் யாரும் இல்லை தேவையில்லாத செயல்களை கல்யாணராமன் என்பவன் இவனை போன்ற கைகூலிகளை வைத்து செயல்படுகிறான் எங்க இறை தூதர் கணஎணியத்தை விட எங்க உயிர் பெரிதல்ல எவன் உயிரும் பெரிதல்ல எச்சரிக்கை

    ReplyDelete