தடை செய்யபட்ட 59 சீன ஆப்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மத்திய அரசு எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், முதற்கட்டமாக சீனாவைச் சேர்ந்த டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
சீன மொபைல் செயலிகள் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட பிறகு அவை பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் தளங்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டன.
மேலும் படிக்க:
டிக் டாக் யூசி பிரவுசர்,ஷேர் இட் உள்ளிட்ட 59 ஆப்பிற்க்கு இந்தியாவில் தடை மத்திய அரசு உத்தரவு:
ஆனாலும் இந்த செயலிகள் முறைகேடாகத் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் மத்திய அரசு தற்போது கடுமையான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்கள் கருதி சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், அவை பதிவிறக்கம் செய்யக் கிடைத்தாலோ அல்லது அவற்றை வேறு வழியில் பயன்படுத்தினாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது
தடை செய்யப்பட்ட சீன செயலிகள் நேரடியாக அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் இயங்கினால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்