Breaking News

சென்னையில் இனி கரோனா பரிசோதனை செய்து கொண்டாலே 14 நாள்கள் தனிமை: சென்னை மாநகராட்சி

அட்மின் மீடியா
1
சென்னையில் இனி கரோனா பரிசோதனை செய்து கொள்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


சென்னையில் இனி கரோனா பரிசோதனை செய்து கொள்பவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இனிவரும் காலங்களில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் தனிநபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கரோனா பாதித்தோர், மற்றும் தனிமைப்படுத்தப்படுவோருக்கு உதவ 6,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என்றும் தெரிவித்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback

1 Comments