Breaking News

ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வர விண்ணப்பிக்கலாம்: இந்திய தூதரகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகளில் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையால் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் பல்வேறு நாடுகளில் உள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே சிக்கியுள்ளனர்





இவ்வாறு பல்வேறு காரணங்களால் நாடு திரும்ப விரும்பும் ஓமன் நாட்டில் உள்ள இந்தியர்கள் கீழ் உள்ள லின்ங்கில் பதிவு செய்யுங்கள் என கேட்டுகொண்டுள்ளது


ஓமனில்  உள்ள இந்திய தூதரகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி  இந்தியா  செல்ல விரும்பும் ஓமனில்  இருக்கும் இந்தியர்களுக்கான விபரங்களை சேகரிக்கபடுகின்றது மேலும் இக்கட்டான சூழ்நிலையில் வெளிநாட்டிலிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பி வருவதற்கு இந்திய அரசு  உதவுவதற்காகவே விபரங்கள் சேகரிக்கப்படுவதாக இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் படிக்க: வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டிற்க்கு  உடனே விண்ண்ப்பியுங்கள் : தமிழக அரசு அறிவிப்பு

இந்த படிவத்தில்  ஒரு நேரத்தில் ஒரு தனி நபருக்கு மட்டுமே நிரப்பப்பட வேண்டும். என்றும் ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனி படிவங்களை நிரப்ப வேண்டும், அதேபோல், நிறுவனங்களும், தங்களின் ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு தனி படிவத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பலாம். மத்திய அரசு அனுமதி

மேலும் இந்தியாவிற்கு பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு தூதரகத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback