Breaking News

கொரோனா நோய் ஒழிப்பில் உதவி வரும் முஸ்லீம்கள்

அட்மின் மீடியா
0
டெல்லி மாநாடு சென்று வந்தவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தபட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் இன்று 18.04.2020 அவர்களில் 10  பேருக்கு கொரோனா இல்லை என்று தற்போது டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்புகின்றனர்.



தமிழகம் முழுவதும் கொரானாவினால் தனிமைபடுத்தபட்ட பலர் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கொரானாவிலிருந்து குணமடைந்தவர்களிடம் மற்றவர்களை கொரானாவில் இருந்து குணப்படுத்த பிளாஸ்மா சிகிச்சைக்கு தங்களின் இரதத்தை தருவதாக சொல்லியுள்ளார்கள் என கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் Dr.வசந்தமணி அவர்கள் தெரிவித்துள்ளார்

மேலும் : பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள

கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து நோய் எதிர்ப்பு அணுக்களை பிரித்து எடுத்து, கொரோனா நோய் உள்ளவர்களுக்கு செலுத்தி அவர்களை குணப்படுத்தும் முறை தான் பிளாஸ்மா சிகிச்சை

source : https://www.youtube.com/watch?v=Ye0-A15J920

கொரோனாவிற்க்கு மருத்து கண்டுபிடிக்க உதவும் இந்த ஆராய்சிக்கு, கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தம் அதிக அளவு தேவைபடும். கொரோனாவிலிருந்து குணமடைந்த பல முஸ்லீம்கள் தங்களில் இரத்தத்தை இந்த ஆராய்சிக்கு கொடுக்க முன் வந்துள்ளனர்




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback