ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்: இஸ்லாமியர்களே கொரானாவை விரட்டுவோம் வாருங்கள்
அட்மின் மீடியா
0
தங்கள் உயிரையும் பொறுட்படுத்தாமல் கொரானா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும், சுகாதார துறை ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஜமா அத்துல் உலமாசபையின் உணர்வு பூர்வமான நன்றி.....
இஸ்லாமியர்களே ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! ”- (திருக்குர்ஆன்- 5:32) என்பதை உணர்ந்து கொராணாவை விரட்டுவோம் வாருங்கள் பிளாஸ்மா சிகிச்சைக்கு இரத்தம் கேட்டு தொடர்பு கொண்டால் கண்டிப்பாக இரத்தம் கொடுங்கள் என்று ஜமா அத்துல் உலமா சபை வேண்டுகோள்
மேலும் : பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள
மேலும் டெல்லியில் சுமார் 400க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொரானா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தும் தமிழகம் வர போக்குவரத்து வசதியில்லாமல் இருக்கின்றார்கள் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு அவர்கள் தமிழகம் வர தக்க நடவடிக்கை எடுக்க ஜமா அத்துல் உலமா சபை தமிழக் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றது
Tags: மார்க்க செய்தி