Breaking News

கொரானா வதந்தி 7.11 நிமிட ஆடியோ உண்மையா?

அட்மின் மீடியா
4
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் இன்னும் மூன்று வாரத்தில் இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்துவிடுவார்கள். தமிழ்நாட்டில் 6 லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள். இந்த கோரமான வைரசை கட்டுப்படுத்த முடியாது இதற்கு மருந்தே கிடையாது என்பது போன்ற பல பொய்யான செய்திகளை அந்த ஆடியோவில் பேசியிருப்பார்கள் 
இது போன்ற ஒரு ஆடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

முதலில் மக்களாகிய நாம் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்  இதுபோன்ற பல ஆடியோக்கள்  சமூக வலைத்தளங்களில் பரவலாக  வந்து கொண்டு இருக்கின்றது. எனவே இதை நம்பி மற்றவருக்கு ஷேர் செய்யாதீர்கள்

இரண்டாவதாக இதன் உண்மை என்ன என்பதை ஆராய வேண்டும் இந்த ஆடியோவில் இவ்வளவு தகவல்களை கூறும் நபர் அவர் யார் எங்கிருந்து பேசுகிறார் இந்த தகவல்களை எங்கிருந்து அவர் தெரிந்து கொண்டார் இதற்கு ஆதாரம் இது என்று எந்த ஒரு விஷயத்தையும் அவர் சொல்ல மாட்டார்.

அடுத்ததாக கொரானா காற்றின் மூலம் பரவுவதாக கூறுகிறார். நோவல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் போன்றவற்றில் இருந்து வரும் நீர்துளிகள் மூலமே பரவி வருவதாக அறியப்படுகிறது. 


இவ்வளவு விஷயங்கள் சொல்லுகிறாரே இந்த விஷயங்கள் உண்மையானதாக இருந்தால் அவர் ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை எனவே இதுவே இது பொய் என்பதற்கு ஆதாரம் ஆகும் 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மேலும் பொய்யான அல்லது தவறான தகவல்களை தயவுசெய்து பரப்பாதீர்கள்.. ஏற்க்கனவே மக்கள் கொரோனா நோயின் பீதியில் இருக்கிறார்கள்இது போன்ற ஆதாரமற்ற செய்தியை பரப்பும் போது அறியாத மக்களின் பீதி இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது என்பதை நாம் விளங்கி கொள்ள வேண்டும் தற்போது கொரோனா நோயை விட இந்த நோய் சம்பந்தப்பட்ட வதந்திகள் தான் அதிகமாகவும் , வேகமாகவும் பரவி வருகிறது

எந்த செய்தி வந்தாலும் forward  செய்யாதீர்கள்  கொஞ்சம் சிந்தியுங்கள் இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யானதாக இருக்குமா என்று என்றும் சமூக பணியில் .......


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

4 Comments

  1. நல்ல தகவல். மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

    ReplyDelete
  2. முகம் காட்டாத கோழைகள்..
    தண்டிக்கப்பட வேண்டியவர்கள்..

    ReplyDelete