டிசம்பர் முதல் டோல்கேட் கட்டணம் : வந்துவிட்டது புதியநடைமுறை
அட்மின் மீடியா
4
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அவற்றை கடந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
தற்போது கட்டண வசூலுக்காக வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இம்முறையில் பயணியர், குறிப்பிட்ட நேரத்தில், தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அதேபோல், சரக்கு போக்குவரத்தும் தாமதமாகிறது.
இதை தவிர்க்க, இந்நிலை மாறவேண்டும் என மத்திய அரசு 'பாஸ்டேக்' என்ற முறையை அறிமுகப்படுத்தியது
இதில் வாகனங்களின் முன் பகுதியில், 'பாஸ்டேக்' எனப்படும், ஸ்டிக்கர் ஒன்று ஒட்டப்படும்.
அதில் நாம் நமக்கு தேவைப்படும் தொகைக்கு, 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம்.
சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும்போது, செலுத்த வேண்டிய கட்டண தொகை, ரேடியோ அதிர்வலை மூலம், தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.
இதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்த வேண்டியது இல்லை.
இந்த திட்டம், வரும் டிசம்பர் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதற்க்கான ஒரு செயலியும் உள்ளது பிளேஸ்டோரில் சென்று இதனை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.fastaguser
Headline is a wrong one. Make it correct.
ReplyDeleteஇந்த முறை வந்தால் நல்ல காசு கவர்மென்ட் எச்சரிக்கை!!!
ReplyDeleteHeadline என்னடா போட்டிங்க, உள்ளே என்னடா செய்தி சொல்ற venaikala
ReplyDeleteஇதற்குதான் போலி ஊடகம்
Delete