Breaking News

ஈரான் இடைக்கால உச்ச தலைவராக அயத்துல்லா அலிரேசா அரபி நியமனம்..!

அட்மின் மீடியா
0

ஈரான் இடைக்கால உச்ச தலைவராக அயத்துல்லா அலிரேசா அரபி நியமனம்..!




அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில், ஈரானின் நீண்டகால உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து ஈரான் இடைக்கால உச்ச தலைவராக அயத்துல்லா அலிரேசா அரபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஈரானின் அதிகாரமிக்க 'நிபுணர்கள் குழு' கூடி, அயத்துல்லா அலிரேசா அரபியை ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவர் ஈரானின் மதக் கல்வி மையங்களின் தலைவராகவும், நிபுணர்கள் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர். கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், ஈரானின் வெளியுறவுக் கொள்கைகளில் தீவிரப் போக்கு கொண்டவராகவும் அறியப்படுபவர்.

ஈரானின் இந்த புதிய தலைமை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான நேரடி மோதலை எவ்வாறு கையாளப்போகிறது என்பது உலக நாடுகளிடையே பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

புதிய உச்ச தலைவரின் கீழ் ஈரான் தனது பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமா அல்லது பேச்சுவார்த்தைக்கு முன்வருமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். 

.ஈரான் முழுவதும் தற்போது துக்க நாடாசரிக்கப்பட்டு வரும் நிலையில், ராணுவத் தளபதிகள் மற்றும் புதிய உச்ச தலைவர் இணைந்து அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானின் அடுத்தகட்ட நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback