3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை ஒரே மாதத்தில் பெற்று கொள்ளலாம் முழு விவரம்
3 மாதங்களுக்கான ரேஷன் பொருட்களை ஒரே மாதத்தில் பெற்று கொள்ளலாம் முழு விவரம்
ரேஷன் அட்டைதாரர்கள் 3 மாதங்களுக்கான பொருட்களை ஏப்ரல் மாதமே பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 20 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. அதேபோல் 500 கிராம் சர்க்கரையும், துவரம் பருப்பு 1 கிலோவும், 1 லிட்டர் பாமாயில் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. ரேஷன் கார்டில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பவே இலவச அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 3 மாதங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள் ஒன்றாக வழங்கப்படுமென மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கான கோதுமை மற்றும் அரிசி போன்றவற்றை பயனாளிகள் ஏப்ரல் மாதத்திலேயே ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கோடைக்காலத்தில் நிலவக்கூடிய கடும் வெப்ப அலைகளின் போது பொதுமக்கள் ரேஷன் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதைத் தவிர்க்கவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
