Breaking News

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை சாக்கடையில் தள்ளி துடிதுடிக்க கொலை செய்த தந்தை..! முழு விவரம் Maharashtra Man Kills 6-Year-Old Daughter To Contest Panchayat Elections

அட்மின் மீடியா
0

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட 6 வயது மகளை கொன்ற தந்தை..! முழு விவரம் Maharashtra Man Kills 6-Year-Old Daughter To Contest Panchayat Elections


மகாராஷ்டிரா கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் கொண்டமங்கலே. 26 வயதாகும் இவர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பினார். இருப்பினும், மகாராஷ்டிரா சட்டப்படி இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்பதால், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான பாண்டுரங்கிற்கு இது தடையாக இருந்தது.

இதனால், தனது அரசியல் ஆசைக்காக 6 வயது மகள் பிராசியைக் கொலை செய்யத் திட்டமிட்டு, கடந்த ஜனவரி 29 அன்று தெலங்கானாவிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள நிசாம்சாகர் கால்வாயில் தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தைத் தெலங்கானா காவலர் ஒருவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்க, அதைப் பார்த்த மகாராஷ்டிரா போலீசார் சிறுமியை அடையாளம் கண்டனர்.

இதன்பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில், பாண்டுரங் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இச்சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த அதே கிராமத்தின் சர்பஞ்ச் கணேஷ் ஷிண்டே என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback