Breaking News

மார்ச் 4ம் தேதி 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

மார்ச் 4ம் தேதி 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முழு விவரம்


கன்னியாகுமரி மாவட்டம்:-

கன்னியாகுமரி சாமி தோப்பில் அய்யா வைகுண்டசாமியின் 194-ஆவது அவதாரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.இதனை கருத்தில் கொண்டு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பொதுத்தேர்வு இருப்பின் அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம்:-

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 194 வது அவதாரத் திருவிழா வருகின்ற 04.03.2026 (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2026 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக (Local Holiday) அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.03.2026 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம்,

திருநெல்வேலி மாவட்டம், அய்யா வைகுண்டசாமி அவர்களின் 194-வது பிறந்த நாள் விழா 04.03.2026 புதன்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 04.03.2026 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument ACT-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்

மேலும், 04.03.2026 அன்று வேலை நாளாக இருந்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்/கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (14.03.2026) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback