Breaking News

டிஜிட்டல் மோசடியால் பணம் இழந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு... ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை இழப்பீடு... ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

இந்தியாவில் யுபிஐ, நெட் பேங்கிங், வாலட் போன்ற டிஜிட்டல் கட்டமைப்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் மோசடி செய்பவர்களும் பல்வேறு வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். போலி போலீஸ் அழைப்பு, டிஜிட்டல் அரெஸ்ட், ஓடிபி ஏமாற்று, ஃபிஷிங் என்று பல வகையான சூழ்ச்சிகள் நடக்கின்றன. இதனால் பலரும் சிறிய தொகையிலிருந்து பெரிய தொகை வரை இழக்க நேரிடுகிறது.

பெரும்பாலான மோசடிகளில் இழப்பு 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சிறிய மதிப்புள்ள மோசடிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்க இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. 

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதைப் பற்றி பேசும்போது, மோசடி நடந்தவர்கள் தங்கள் தவறால் அல்லது வேறு யாருடைய தூண்டுதலாலோ பணத்தை இழந்திருந்தாலும், கேள்வி கேட்காமல் உதவி செய்யப்படும் என்று தெளிவாகக் கூறினார்.இழப்பில் 85 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் எது குறைவோ அதை வழங்குவார்கள். 

உதாரணமாக, ஒருவர் 30 ஆயிரம் ரூபாய் இழந்தால் 85 சதவீதம் அதாவது 25,500 ரூபாய் வர வேண்டும் ஆனால் வரம்பு 25 ஆயிரம் என்பதால் 25 ஆயிரமே கிடைக்கும். 10 ஆயிரம் இழந்தால் 85 சதவீதம் அதாவது 8,500 ரூபாய் கிடைக்கும்.இது ஒரு முறைக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் சலுகை. அதாவது ஒரே நபருக்கு வாழ்நாளில் ஒரு முறைதான் இந்த இழப்பீட்டைப் பெற முடியும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2017-ல் வெளியிடப்பட்ட வாடிக்கையாளர் பொறுப்பு குறித்த வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்து புதிய வரைவு வெளியிட உள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback