Breaking News

மார்ச் 16ல் மாநிலங்களவைத் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
மார்ச் 16ல் மாநிலங்களவைத் தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு.




தமிழகத்தைச் சேர்ந்த 

திமுகவின் திருச்சி சிவா, 

என்.ஆர். இளங்கோ, 

அந்தியூர் செல்வராஜ், 

கனிமொழி 

என்விஎன் சோமு, 

அதிமுக தம்பிதுரை, 

தமாகா ஜிகே வாசன் 

ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. 

தற்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.அதற்கு அதிகமாக வேட்பாளர்கள் நிற்கும் பட்சத்தில் தேர்தல் நடைபெறும்.

இதனையடுத்து தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் உட்பட 10 மாநிலங்களின் 37 எம்.பி இடங்களுக்கு மார்ச் 16-ந் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தேர்தல் அட்டவணை:-

பிப்ரவரி 26-ந் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும்

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9

போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16

வாக்குப் பதிவு நடைபெற்றால் மார்ச் 16- ந் தேதி 

மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback