நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு...!
நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் - சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு...!
தமிழகம் முழுவதும் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான சத்துணவு மையங்கள் நாளை முதல் செயல்படாத சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ மாணவிகளுக்காக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் என பல்லாயிரக் கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில்
- சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். கடந்த தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது
தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் முடிவுகாலமுறை ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 71,000 பேர் போராட்டத்தில் ஈடுபட முடிவு
Tags: தமிழக செய்திகள்
