கள்ளக்குறிச்சி அருகே துயரம் திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே துயரம் திருவிழாவில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்று திருவிழாவின் போது ஹீலியம் வாயு நிரம்பிய சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். பலூனில் காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அங்கு நின்ற 4 பேர் உயிரிழந்தனர் மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் பலூன்களுக்கு காற்று நிரப்பும் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழாவின்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் பலியானதுடன், மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
