பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் முழு விவரம்
பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எந்தவித பரிவர்த்தனையும் இல்லாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் பிப்ரவரி 1 முதல் செயலற்றதாக மாற்றப்படும். அதாவது, உங்கள் வங்கிக் கணக்கில் நீண்ட காலமாக எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்யாமல் இருந்தால், அது முடக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் கணக்கு செயலற்றதாக மாறுவதைத் தவிர்க்க, பிப்ரவரி 1ஆம் தேதிக்கு முன் அதில் ஒரு சிறிய பரிவர்த்தனையையாவது செய்வது நல்லது.
பாஸ்டாக் மூலம் சுங்கச்சாவடி வசூலை எளிதாக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கார், ஜீப் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் ஃபாஸ்டாக்குகளுக்கு KYC தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஃபாஸ்டாக் பயன்படுத்துவோரின் புகார்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபாஸ்டாக் பயன்படுத்துவதை மேலும் எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது
உங்களுடைய பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31 ஆகும். இந்த தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகள் பிப்ரவரி 1 முதல் செயலிழக்கச் செய்யப்படும். செயலிழந்த பான் கார்டை எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும் நீங்கள் பயன்படுத்த முடியாது. எனவே, உங்கள் பான் கார்டு செயலிழப்பதைத் தவிர்க்க ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆதார் கார்டுடன் இணைத்துவிட வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு (LPG), வணிக எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். ஜனவரி 1, அன்று, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலை மாறாமல் இருந்தது. ஆனால், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை 111 ரூபாய் உயர்த்தப்பட்டது. எனவே இந்த முறையும் பிப்ரவரி 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும்.
வங்கி விடுமுறைகள்! 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 9 நாட்களுக்கு வங்கிகள் முடப்பட்டிருக்கும். சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல், சில உள்ளூர் விடுமுறைகளும் உள்ளன. இந்த நாட்களில் ஆன்லை வங்கிச் சேவை மற்றும் ஏடிஎம்களைப் பொதுமக்கள் எந் தத் தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
Tags: தமிழக செய்திகள்
