ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு புதிய விதிகளை அறிவித்த சவுதி அரசு haj mandatory 2026
ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு புதிய விதிகளை அறிவித்த சவுதி அரசு
ஹஜ் புனித யாத்திரையை மிகவும் பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிப்பதற்காக, யாத்ரீகர்கள் அனைவரும் 'நுஸுக்' (Nusuk) அட்டையைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
இந்த அட்டை ஒரு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் அனைத்தும் ரத்து !உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு 'மொபைல் போன்' வாயிலாக டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்குச் சவுதி வந்தவுடன் அச்சிடப்பட்ட வடிவிலும் 'நுஸுக்' அட்டை வழங்கப்படும்.
ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுவதும், யாத்ரீகர்கள் இந்த அட்டையை எப்போதும் தங்கள் உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹஜ்அதிகாரப்பூர்வ 'நுஸுக்' அட்டையை உடன் வைத்திருக்காத யாத்ரீகர்களுக்குச் சவுதி அரேபிய அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஹஜ் சேவைகள் மறுக்கப்படலாம். இந்த விதிக்கு அனைத்து யாத்ரீகர்களும் கண்டிப்பாகக் கட்டுப்படுவது அவசியம் என்று இந்திய ஹஜ் குழுவும் அறிவுறுத்தியுள்ளது.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி
