தூரம் அடிப்படையில் விமான டிக்கெட் கட்டணம் நிர்ணயம் - உச்சவரம்பு நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு!
விமான டிக்கெட் தூரம் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் - உச்சவரம்பு நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு!
விமான சேவை நிறுவனங்களுக்கு 4 பிரிவுகளில் டிக்கெட் கட்டண உச்ச வரம்பை நிர்ணயித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு!
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோருக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.18,000 நிர்ணயம். இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி, பிற விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை.
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அனைத்து விமான நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டண உச்சவரம்புகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தூரம் தூரம் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம்
இந்த அவசரகால உத்தரவின் கீழ், உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான பொருளாதார வகுப்பு (Economy-class) கட்டணங்களில் நாடு தழுவிய கட்டண உச்சவரம்பு உடனடியாக விதிக்கப்பட்டுள்ளது.இந்த வரம்பு தூரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 500 கிமீ வரை ₹7,500,
1000 கிமீ வரை ₹12,000,
1500 கிமீ வரை ₹15,000,
1500 கிமீக்கு மேல் ₹18,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரிகள், UDF, PSF ஆகியவற்றைத் தவிர்த்து இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வணிக வகுப்பு (Business-class) கட்டணங்களுக்கு இந்த வரம்பு பொருந்தாது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-
இண்டிகோ நிறுவன நெருக்கடியால் தற்போது விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின்போது சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பவாத கட்டண நிர்ணயத்திலிருந்தும் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது.தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் கட்டண நிர்ணய ஒழுக்கத்தைப் கடைப்பிடித்தல், நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தல், மூத்த குடிமக்கள், மாணவர்கள், நோயாளிகள் உட்பட அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்கள் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கமாகும்.கட்டண நிலைகளை அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்படாவிட்டால், பொது நலனைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்
