Breaking News

கேரள நடிகை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுதலை முழு விவரம்

அட்மின் மீடியா
0




நடிகை பாவனா, நடிகர் திலீப் பாலியல் வழக்கு தொடர்பாக, நடிகர் திலீப் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பைவழங்க இருக்கிறது. சுமார் ஆறரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு கொச்சியில் நடிகை ஒருவர் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரை வழிமறித்து, காருக்குள்ளேயே அவருக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நடிகை அளித்த புகாரின் பேரில், எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

திலீப்போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெரும்பாவூரைச் சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் தலைமையிலான சிலர் தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

சுனிலைக் கைது செய்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையின் முடிவில் தான், இந்தப் பாலியல் துன்புறுத்தலின் பின்னணியில் ஒரு பெரிய சதித் திட்டம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.இந்தச் சம்பவத்திற்குக் காரணமே, பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகை ஆகியோருக்கு இடையே நிலவி வந்த முன்விரோதம் தான் என்றும், நடிகர் திலீப் சதித் திட்டம் தீட்டியதன் பேரிலேயே இந்தக் கொடூரச் செயல் அரங்கேறியது என்றும் விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நடிகர் திலீப்பை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஆலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட மொத்தம் 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை 2018ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நடிகர் திலீப் கடந்த 2018ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் முக்கியச் சாட்சிகளிடம் சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின்  ஒன்று முதல் ஆறு வரையானவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. 

நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக இருந்தார். அவர் குற்றவாளி அல்ல என தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 

கூட்டு ஆலோசனை குற்றம் நிரூபிக்கப்படாததால் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 குற்றம் சாட்டபட்ட ஒன்று முதல் ஆறு வரை உள்ளவர்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும் ஏனைய நாலு பேர் விடுவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

குற்றச் சம்பவத்தில் நேரடியாக  ஈடுபட்ட ஆறு பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Give Us Your Feedback