மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு 12ஆம் தேதி முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு 12ஆம் தேதி முதல் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
அதன்படி உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15, 2025 அன்று தொடங்கி வைத்தார்.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான மனுக்கள் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.அதன்படி 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை 15, 2025 அன்று தொடங்கி வைத்தார்.
இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான மனுக்கள் ஏற்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.இதற்காக, நவம்பர் 15 வரை நடைபெற்ற இந்த முகாம்களில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவகாசியில் மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது,
கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம்12-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும் பலருக்கு வழங்கப்பட உள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்
