Breaking News

எறும்புகள் மீதான பயம் - உயிரை மாய்த்துக் கொண்ட பெண் myrmecophobia fear of ants

அட்மின் மீடியா
0

தெலுங்கானாவில் எறும்புகளுக்கு பயந்து இளம் பெண் தற்கொலை  முழு விவரம் செய்து கொண்ட விசித்திரமான தற்கொலை வழக்கு.

தெலங்கானாவில் வீட்டை சுத்தம் செய்யும்போது அதிக அளவில் எறும்புகள் இருப்பதை பார்த்த மனிஷா என்ற (25) பெண், கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்!



எறும்புகளை கண்டு பயப்படும் Myrmecophobia என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்த மனிஷா, கணவரிடம் தன்னை மன்னித்துவிடுமாறும், குழந்தையையும், |மாமியாரையும் கவனித்து கொள்ளுமாறும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம். மஞ்சேரியலை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.

மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்பை கண்டு பயப்படும் மிர்மிகோ போபியா என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி உள்ளவர்கள் எறும்புகளை சுண்டால் பயந்து அலறி நடுங்குவார்கள். 

மனிஷா இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை ஸ்ரீகாந்த் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார். எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்தார். 

அதில் ஐஎம்சாரி ஸ்ரீ. என்னை மன்னித்துவிடு. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். -நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன்.மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே என எழுதினார். 

பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு செய்து தகாண்டார். மனிஷா உயிரிழந்தது குறித்து ஸ்ரீகாந்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பதறி அடித்தப்படி ஓடி வந்த கணவர் மனைவி உயிரிழந்ததை கண்டு கதறி அழுத்தார். பின்னர் மனைவியின் கடிதத்தை பார்த்து அதிர்ந்து போனார். 

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எறும்புகளுக்கு பயந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback