நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த தம்பதி, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி உயிரிழப்பு
நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததம்பதி, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி உயிரிழப்பு
மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பு–பத்மாவதி தம்பதியினர் அலங்காநல்லூர் நோக்கி இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களது இருசக்கர வாகனத்தில் காமாட்சி அம்மன் நகர்ப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது வாகனம் மோதி, இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து இருவர் மீதும் அதிவேகத்தில் மோதியது. இதில் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மனைவி பத்மாவதி தலையில் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி பத்மாவதியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் மோதிய நாயும் இறந்தது. இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்
