வில்லங்க சான்றிதழ் போல் இனி பட்டா வரலாறு தெரிந்து கொள்ளலாம் புதிய நடைமுறை
வில்லங்க சான்றிதழ் போல் இனி பட்டா வரலாறு தெரிந்து கொள்ளலாம் புதிய நடைமுறை
சொத்துகளின் பட்டா வரலாற்றை தெரிந்து கொள்ள புதிய சேவையை துவங்க உள்ளது தமிழ்நாடு அரசு.
பட்டா வரலாறு சேவை மூலம் 2014ம் ஆண்டு முதல் ஒரு சொத்து யார் யார் வசம் இருந்தது, தற்போது இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும்.
ஆன்லைன் வாயிலாக பட்டா வரலாறு தெரிந்து கொள்ளும் திட்டம் ஒரே ஒரு தாலுகாவில் சோதனை முறையில், அடுத்த மாதம் அறிமுகம் செய்ய திட்டம்.
ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.
வில்லங்க சான்றிதழில்:-
ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அவரது பெயர் என்ன?
இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது?
அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா?
இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் பட்டாவில், பத்திரப்பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல் அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தமிழக அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது''பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பட்டா வரலாறு 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும்.
Tags: தமிழக செய்திகள்
