முகவரி இல்லாமல் ஆதார் கார்டு - இனி புகைப்படமும் கியூஆர் கோடு மட்டும் தான் ஆதார் புது அப்டேட் aadhar new updates
பெயர், முகவரி இல்லாமல் ஆதார் கார்டு - இனி புகைப்படமும் கியூஆர் கோடு மட்டும் தான் ஆதார் புது அப்டேட் aadhar new updates
இந்தியாவின் ஆதார் அட்டை விரைவில் முக்கிய மாற்றம் பெற உள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. இனி ஆதார் கார்டில் நபரின் புகைப்படமும் QR கோடும் மட்டும் இடம்பெறும்; பெயர், முகவரி போன்ற விவரங்கள் அச்சிடப்படாது. அடையாள சரிபார்ப்புகளுக்கு புதிய ஆதார் App பயன்படும், இதில் உள்ள கியூஆர் கோடினை காட்டினாலே போதும்; அட்டை அல்லது நகல் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லையாம்..
ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது.
தனிநபர், நிறுவனங்களுக்கு பொதுமக்களின் ஆதார் விவரங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக ஓட்டல்கள், மொபைல் போன் சிம் விற்பனையாளர்கள், கருத்தரங்குகளை நடத்துவோருக்கு ஆதார் விவரங்கள் கிடைக்கின்றன. இதை சிலர் தவறாக பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எந்தவொரு இடத்திலும் பொதுமக்கள் ஆதார் நகலை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ஆதார் செயலி வாயிலாக டிஜிட்டல் முறையில் தகவல்களை அளிக்க முடியும்.அடுத்த கட்டமாக ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் கியூஆர் கோடு மட்டுமே அச்சிட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
குறிப்பாக 12 இலக்க எண் ஆதார் அட்டையில் அச்சிடப்படாது. எனினும் அட்டைதாரரின் பெயர் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிச்சயமாக முகவரி இடம்பெறாது. பிரத்யேக செயலி அல்லது யுஐடிஏஐ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கருவியால் மட்டுமே கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல்களை பெற முடியும்.
Tags: முக்கிய செய்தி
