Breaking News

தீபாவளிக்கு சொந்த ஊர் போறிங்களா- தனியார் பேருந்தில் கட்டணம் அதிகமா இருக்கா இந்த நம்பருக்கு போன் பன்னுங்க

அட்மின் மீடியா
0

தீபாவளிக்கு சொந்த ஊர் போறிங்களா- தனியார் பேருந்தில் கட்டணம் அதிகமா இருக்கா இந்த நம்பருக்கு போன் பன்னுங்க

சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அதிக அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு பேருந்து சேவைகளை விட தனியார் பேருந்து சேவை அதிக அளவில் உள்ளது. ஆனால் பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள், கட்டணங்களை மூன்று மடங்கு அதிகமாக உயர்த்தி விடுகின்றனர். 

இதனை தடுக்க கோரி பல முறை பயணிகள் கோரிக்கை வைத்தும் பெரிய அளவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்

முன்பதிவு செய்யும் பயணிகள், பேருந்தில் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. வழக்கமாக சென்னையில் இருந்து ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்றால் பேருந்தின் வசதியை பொறுத்து ரூ.650 முதல் ரூ.1200 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தீபாவளி கட்டணமாக ரூ.3,500 முதல் ரூ.4000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் , தீபாவளி காலகட்டமான அக்டோபர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து சரக இணை போக்குவரத்து ஆணையாளர்கள் மற்றும் துணை துணை போக்குவரத்து ஆணையாளர்களுக்கு போக்குவரத்து ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கூடுதல் கட்டணம் குறித்து பயணிகள் புகார் அளிக்க, போக்குவரத்து துறை சார்பில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை (ஆணையர்) – 1800 425161

சென்னை வடக்கு (இணை ஆணையர்) – 9789369634

சென்னை (தெற்கு) – 936134 1926

மதுரை- 9095366394

கோயம்புத்தூர்- 9384808302

விழுப்புரம்- 9677398825

வேலூர்- 98400230118

சேலம்- 7845636423

ஈரோடு- 9994947830

திருச்சிராப்பள்ளி- 9066032343

விருதுநகர்- 9025723800

திருநெல்வேலி- 9698118011

தஞ்சாவூர் – 9585020865



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback