Breaking News

கரூரில் 41 பேர் உயிரிழந்த குடும்பத்தினரை நாளை சந்திக்கிறார் விஜய்..!!

அட்மின் மீடியா
0

கரூரில் 41 பேர் உயிரிழந்த  குடும்பத்தினரை நாளைச் சந்திக்கிறார் விஜய்..!! 



கரூர் வெண்ணைமலையில் இருந்து தவெக தலைவர் விஜயை சந்திக்க 7 ஆம்னி பேருந்துகளில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் 35 குடும்பத்தினர்கள், உறவினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் தனியார் மண்டபத்திற்கு வரவழைத்து நாளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

கரூர் மாவட்ட நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினர். தலைவர் விஜய்யின் உத்தரவுப்பேரில், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். 

"இழப்பை ஈடுகட்ட முடியாது, ஆனால் கட்சியாக நாங்கள் அவர்களுக்கு துணையாக இருப்போம்" என விஜய் உறுதியளித்தார்.

முதலில் கரூரில் உள்ள மண்டபத்தில், பாதிக்கப்பட்டோரை வரவழைத்து அவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டார். இதற்காக, கரூரில் மண்டபங்கள் பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் சந்திப்புக்கு கரூரில் மண்டபங்கள் கிடைக்க சிக்கல் நீடித்ததால், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரைரையும், நெரிசலில் காயமடைந்தவர்களையும் சென்னைக்கு வரவழைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி மாமல்லபுரம் தனியார் விடுதியில் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று காலை கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் புறப்பட்டன. இவை தவெகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டவை. 

பயணத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். பேருந்துகளில் உணவு, மருத்துவ உதவி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்கிறார்.பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் தவெக ஏற்றுக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback