Breaking News

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு!




நோட்டரிஆவணங்களில் கையெழுத்திட சாட்சி அளிக்கும் நோட்டரிகள் சேவை தேவை அதிகரித்த நிலையில், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது.

இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில்:

மத்திய சட்​டம், நீதி அமைச்​சகத்​தின் சட்ட விவ​காரத் துறை அக். 17-ம் தேதி​யிட்ட அறிவிக்கை மூலம் நோட்​டரி​கள் (திருத்​தம்) விதிகள் 2025-ஐ அறி​வித்​துள்​ளது. மேலும், நோட்​டரி​கள் சட்​டத்​தால் (1952) வழங்​கப்​பட்ட அதி​காரங்​களின்​கீழ் நோட்​டரி​கள் விதி​கள் 1956, மேலும் திருத்​தம் செய்​யப்​படு​கிறது.

இதன்​மூலம் தமிழகம், குஜ​ராத், ராஜஸ்​தான், நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளால் நியமிக்​கப்​படக்​கூடிய அதி​கபட்ச நோட்டரிகளின் (சான்று உறுதி அலு​வலர்​கள்) எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. 

இதன்​படி, நோட்​டரி​கள் எண்​ணிக்கை தமிழகத்​தில் 2,500-ல் இருந்து 3,500 ஆகவும், குஜ​ராத்​தில் 2,900-ல் இருந்து 6,000 ஆகவும், ராஜஸ்​தானில் 2,000-ல் இருந்து 3,000 ஆகவும், நாகாலாந்​தில் 200-ல் இருந்து 400 ஆகவும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.மக்​கள்​தொகை வளர்ச்​சி, மாவட்​டங்​கள், வரு​வாய் வட்​டங்​களின் எண்​ணிக்​கை, நோட்​டரி சேவை​களுக்​கான தேவை ஆகிய​வற்றை அங்​கீகரித்​து, அந்​தந்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்​பட்ட கோரிக்​கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என அதில் கூறப்​பட்​டுள்​ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback