Breaking News

ரீல்ஸ் வீடியோ எடுக்க அதிவேகமாக பைக் ஓட்டி சென்ற மாணவர் விபத்தில் பலி

அட்மின் மீடியா
0

 
தமிழகத்தில் சென்னையில் ஜமீன் பல்லாவரம் பகுதியில் வசித்து வருபவர்  ஏ.சி. மெக்கானிக்  அப்துல் அகமது . 
17 வயதான இந்த சிறுவன்  அண்ணனின் மோட்டார் சைக்கிளில், தனது நண்பரான  சுஹேல் அகமது வயது 15  ஏற்றிக்கொண்டு பல்லாவரம் சந்தை சாலையில் மின்னல் வேகத்தில் சென்று ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்திசையில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக  வந்தனர். இரு மோட்டார் சைக்கிள்களும் திடீரென்று நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. 

இந்த கோர விபத்தில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுவன் சுஹேல் அகமது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். 

மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

படுகாயம் அடைந்த 4 பேரையும் தாம்பரம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இச்சம்பவம் குறித்து  போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Give Us Your Feedback