சினிமாவில் வருவது போல் ரயிலில் பயணிகளிடம் மிரட்டி பணம் பறித்த போலி டிடிஆர் கைது
சினிமாவில் வருவது போல் ரயிலில் பயணிகளிடம் மிரட்டிப் பணம் பறித்த போலி டிடிஆர் கைது
மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி வழியாகக் கோவைக்குத் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16617) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் நேற்று முன்தினம் சாதாரண வகுப்பு பெட்டியில் ஒரு நபர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். அப்போது அதே ரயிலில் டிக்கெட் பரிசோதனையில் திருச்சி கோட்டத்தைச் சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் கே.எம்.சரவணன் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் அவர் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே ஒருவர் டிக்கெட்டை சரிபார்த்து விட்டார் என்று பயணிகள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் சம்பந்தப்பட்ட நபரிடம் அடையாள அட்டை மற்றும் டிக்கெட் பரிசோதகருக்கான ஆவணங்களைக் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தனது அடையாள அட்டையைத் தர மறுக்கவே ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், திருச்சி ரயில்வே கோட்ட வர்த்தக கட்டுப்பாட்டு பிரிவுக்கும் தகவல் தெரிவித்தார்.
ரயில் ரயில்வே நெல்லை திருநெல்வேலி தூத்துக்குடிஇதற்கிடையே மானாமதுரைக்கு ரயில் வந்தடைந்தது. அங்கு அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் காட்டுபரமக்குடி தெளிச்சாத்தநல்லூரை சேர்ந்த ராம்பிரகாஷ் என்பதும், போலி டிக்கெட் பரிசோதகர் என்பதும் பயணிகளிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிய வந்தது.
அதன் பின்னர் அவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்