9-ம் வகுப்பு மாணவர்கள்புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாம் - சிபிஎஸ்இ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இனி மாணவர்கள் புத்தகம் பார்த்து தேர்வு எழுதலாமா.. சிபிஎஸ்இ கொண்டு வரும்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகதைத் பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் பல முக்கிய அம்சங்களில் மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் மாணவர்களின் மனப்பாட கற்றலைத் தவிர்த்து, திறன் அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
