மகளிர் குழுக்கடன் திட்டம் ரூ. 25 லட்சம் வரை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO) குழுக்கடன் திட்டம் ரூ. 25 லட்சம் வரை
சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள மகளிர் மற்றும் ஆடவர் குழுவாக சிறு தொழில் / வணிகம் செய்வதற்கு குழுக்கடன் வழங்கப்படுகிறது.
குழு உறுப்பினர்கள் ஒருவருக்கு அதிகப்பட்சம் ரூ. 1,25 லட்சம்.
ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம்
திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள்.
ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டும்
குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.
தகுதிகள் :-
பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர்
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
வயது: 18-60 வரை
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள். www.tabcedco.tn.gov.in. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள். மாவட்ட / மத்திய / நகர கூட்டுறவு வங்கிகள் / கூட்டுறவு கடன் சங்கங்கள். ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்:-
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.
குடும்ப அட்டை,
ஓட்டுநர் உரிமம்,
ஆதார் அட்டை.
Tags: தமிழக செய்திகள்
