தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி முழு விவரம்
தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி முழு விவரம்
நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என்றும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்களால் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படும் நிலையில் கால்நடைத் துறை சார்பில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. meelum இது தொடர்பான விரிவான வழிகாட்டு நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்தும் விதமாகவும், ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் குறையும் என்பதாலும் கால்நடை துறையின் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்