திராவிடர் கழகம் மதிவதனி பற்றி ஆபாச பேச்சு - நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் கைது
திராவிடர் கழகம் மதிவதனி பற்றி ஆபாச பேச்சு - நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் கைது
சென்னை,திராவிடர் கழக நிர்வாகி மதிவதனி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் சாரங்கபாணி கைது செய்யப்பட்டுள்ளார்.
யூடியூப் சேனலில் மதிவதனி குறித்து ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் விதமாகவும் பேசியது தொடர்பாக கோவை மாநகர காவல்துறையில் திராவிடர் இயக்கத்தினர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சாரங்கபாணி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓசூரில் இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் ஒரு யூ-ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்
மிகவும் ஆபாசமாகவும் , அருவெறுக்க தக்க வகையிலும் மதிவதனி குறித்து பேட்டியளித்ததாக திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பிரபாகரன், சாரங்கபாணி மீது கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்திருந்தார். சாரங்கபாணி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த சாரங்கபாணி ஒசூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவையில் இருந்து ஒசூர் சென்ற தனிப்படையினர் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான சாரங்கபாணியை கைது செய்தனர்.
Tags: தமிழக செய்திகள்