சென்னையில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!! குடிநீர் வழங்கல் வாரியம் அறிவிப்பு
சென்னையில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!! குடிநீர் வழங்கல் வாரியம் அறிவிப்பு
இது தொடர்பாக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மி.மீ விட்டமுடைய 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 2000 மி.மீ குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால்
30.07.2025 அன்று காலை 08.00 மணி முதல் 01.08.2025 இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் –7 (அம்பத்தூர்), 8 - (அண்ணா நகர்), 9 - (தேனாம்பேட்டை), 10 - (கோடம்பாக்கம்), 11 - (வளசரவாக்கம்), 12 - (ஆலந்தூர்), 13 - (அடையாறு) மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் https://cmwssb.tn.gov.in பெற விண்ணப்பிக்கலாம்
Tags: தமிழக செய்திகள்