கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி பாலியல் வனகொடுமை சம்பவம் - வட மாநில இளைஞர் கைது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 10 வயது மாணவி ஒருவர், நடுரோட்டில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் சனிக்கிழமை அன்று, சிறுமி சாலையில் நடந்து சென்றபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாயை மூடி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது,
இந்த நிலையில், குற்றவாளியை கைது செய்ய எஸ்பி தலைமையில் 3 டிஎஸ்பி குழுக்களை அமைத்து காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இந்த தனிப்படைகள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் செயல்படுகின்றன. மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) – ஜெயஸ்ரீ (கும்மிடிப்பூண்டி), தமிழரசி (திருவள்ளூர்), மற்றும் புகழேந்தி (செங்கல்பட்டு) தலைமையில் இந்த தனிப்படைகள் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பதிவானசெல்போன் சிக்னல், வாகன எண்கள் சேகரித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது சிசிடிவி கேமராவில் பதிவான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இப்பொழுது குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு தகவல் சொல்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பரிசு அறிவித்து தொலைபேசி எண்ணையும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 13 நாட்களுக்கு பின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன் எனக் கூறப்படுகிறது.
ரயில் நிலையத்தில் வைத்து பிடிக்கப்பட்ட அந்த நபரிடம், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று அணிந்திருந்த அதே நிறத்தில் உள்ள டீ-சர்டில் இருந்த மேற்குவங்க நபரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்