Breaking News

ஐபிஎல் சாம்பியன் RCB அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார்!

அட்மின் மீடியா
0

ஐபிஎல் சாம்பியன் RCB அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார்!

தன்கிழமை நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு காவல்துறை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), நிகழ்வு மேலாண்மை நிறுவனமான DNA என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் மற்றும் பலர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 17 ஆண்டுகளில் முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.

இதனையடுத்து, பெங்களூருவில்  நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில்  இலட்சக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 

இந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட குற்றச்சாட்டின்பேரில் ஆர்.சி.பி. அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback