Breaking News

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவணை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி நடந்தது என்ன முழுவிவரம் raja raghuvanshi murder case

அட்மின் மீடியா
0

ஹனிமூன் சென்ற இடத்தில் கணவணை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி நடந்தது என்ன முழுவிவரம்


மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி raja raghuvanshi,  என்பவருக்கும் Sonam என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது

இதையடுத்து அவர்கள் கடந்த மாதம் மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு சில்லாங், சோஹ்ரா பகுதியில் உள்ள ஹோம் ஸ்டே விடுதியில் அவர்கள் தங்கியிருந்தனர். கடந்த மே 23 ஆம் தேதி அவர்கள் ரூமை செக் அவுட் செய்துள்ளனர். அதன் பின்பு அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களின், 'மொபைல் போனும் சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தால் அதன்பின்பு மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். 

இதனிடையே கடந்த 2 ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ.,தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா உடல் பாதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. ஆனால் அவரது மனைவி சோனம் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இந்த கொலையை யார் செய்தார்கள்? எதற்காக இந்த கொலை அரங்கேறியது? சோனம் ரகுவன்ஷியை நிலை என்னஅவரும் கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்து மேலும்  ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என தீவீர விசாரனையில் இறங்கிய போலீசார் சிசிடி காட்சிகளை ஆராய்ந்தனர்..

இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் மர்மம் விலகியது. 

8 நாட்களுக்கு பின்பு மனைவி சோனம்  உத்தரப்பிரதேச காவல்நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரனையில் சோனம் தான் ராஜாவைக் கொல்ல வாடகை அடிப்படையில் நபர்களை ஏற்பாடு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

கணவரை கொலை செய்ததை மனைவி ஒப்புக்கொண்டார். சோனம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேகாலயா டிஜிபி லார்டோ நொங்ராங் தெரிவித்ததாவது, “முதற்கட்ட விசாரணையில், இந்த திட்டமிட்ட கொலையின் பின்புலத்தில் சோனம் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வாடகைக் கொலையாளிகளை நியமித்துள்ளார்” என கூறினார்.

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டதில், “ராஜா கொலை வழக்கில் வெறும் ஏழு நாட்களிலேயே முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்று தாக்குதலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொரு நபரைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என குறிப்பிட்டுள்ளார். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback