மக்களே ரெடியா - ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் Free Spiritual Journey to Amman Temples in Aadi Month!
மக்களே ரெடியா - ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா Free Spiritual Journey to Amman Temples in Aadi Month! ...
ஆடி மாதத்தில் 2,000 பக்தர்களை தமிழ்நாடில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு இலவச சுற்றுலா அழைத்துச் செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்டுதுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த 60-70 வயதுக்கு உட்பட்ட, ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்கள் வரும் ஜூலை 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.hrce.tn.gov.in அல்லது 1800 425 1757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தகவல்
தமிழ்நாட்டில் மக்கள் தாய்தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப் போற்றி வருகின்றனர். பல்வேறு திருக்கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வழிபடுவதை பெருவிருப்பமாகக் கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து எதிர் வரும் ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
2022 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கும். வைணவத் திருக்கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக எதிர்வரும் ஆடி மாதம் சென்னை. திருச்சி. மதுரை. தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் KSராயபுரம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி
கருமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 8 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருக்காவூர் அருள்மிகு கற்பகராட்சாம்பிகை திருக்கோயில், தஞ்சை அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் உள்ளிட 6 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படும். இந்த ஆன்மிகச் சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் ஆன்மீகச் சுற்றுலா தொடர்பாக சுற்றுலாத்துறையில் பதிவு செய்தல் வேண்டும். மேலும் இது தொடர்பாக விவரங்களுக்கு www.ttdsonline.con என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://hrce.tn.gov.in/resources/docs/pressrelease/2022/101/document_1.pdf
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி