பீகாரில் போலி காவல்நிலையம் நடத்தி ஏமாற்றிய இளைஞர் நடந்தது என்ன முழு விவரம் fake police station operating in bihar
பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள மோஹானி கிராமத்தில் சுமார் 1 வருடங்களுக்கும் மேலாக போலியான காவல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் குமார் என்ற நபர் கிராமின் ரக்ஷா தளம் அமைப்பில் ஜவான்கள் மற்றும் காவலர்களாக சேருவதற்காக பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் 30 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர்பவர்களுக்கு ஹோம் கார்டில் வேலை கிடைக்கும் என பயிற்சி அளித்து அவர்களிடம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு போலியான போலீஸ் சீருடைகள், அடையாள அட்டைகளை வழங்கியுள்ளார். டிசம்பர் 2024 மற்றும் ஜனவரி 2025 இடையே இந்தப் பயிற்சி நடைபெற்றுள்ளது. பிகார் மாநில தள்பதி மற்றும் கிராம் ரக்ஷா தள் என்ற பேனருடன் ஒரு மாத கால பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்தப் பயிற்சியை முடித்த இளைஞர்களும், இளம் பெண்களும் தற்போது புகார் அளித்துள்ளனர்.அதில் எங்களுக்கு அவரை தேசிய மாணவர் படையில் இருந்து தெரியும், கிராம் ரக்ஷா தள்ளுக்கு அங்கீகாரம் கிடைத்தால், எங்கள் அனைவருக்கும் அரசு வேலைகள் கிடைக்கும் என ராகுல் சொன்னார். அதனை நம்பி பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளோம்.
அங்கு பயிற்சியை முடித்தவுடன் அனைவருக்கும் முறையாக அடையாள அட்டைகளையும் வழங்கியிருக்கிறார்.
சிலநாட்கள் கழித்து BGRD (Bihar Gram Raksha Dal) என எழுதப்பட்டு இருக்கும் சீருடையைக் கொடுத்து வேலை கிடைத்திருப்பதாகக் கூறினார். ஆனால் ஒருமுறைகூட ஊதியம் என எதையும் பெறவில்லை.
நாங்கள் கிராமங்களில் ரோந்து செல்லவும், சட்டவிரோத மதுபானக் கடத்தல் சம்பவங்களில் சோதனை நடத்தவும் அபராதம் விதிக்கவும் பணி அமர்த்தப்பட்டோம். வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்படும் பணத்தில் பாதியை ரோந்து குழுவுக்குக் கொடுத்தார். மேலும் பணம் கட்டாதவர்களுடைய வாகனங்களை, மோஹானி பஞ்சாயத்தில் உள்ள ஒரு பள்ளியை போலி காவல் நிலையமாக மாற்றி, அங்கு கொண்டுபோய் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
அவர் மீது சந்தேகம் வந்து விசாரிக்கையில் அவர் எங்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாகல்பூர், சுபால், பூர்னியா, கதிஹர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பல இளைஞர்களை ஏமாற்றி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இது குறித்து பூர்னியா காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேய கே. ஷர்மா போலி காவல் நிலையம் என்ற நிகழ்வு இல்லை. கிராம் ரக்ஷா தள்-க்கு பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் 30 நாள்கள் பயிற்சி அளித்து பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு கான்ஸ்டபிள் மற்றும் சவுக்கிதார் போன்ற பதவிகளின் பெயரில் ஏமாற்றியுள்ளார் என தெரிய வந்துள்ளது இதில் முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் ராகுல் குமார் ஷா இந்த பிகார் கிராம் ரக்ஷா தள்-உடன் தொடர்புடையவர்." ராகுல் குமாரையும் ரோந்துக் குழுவில் செயல்பட்ட அவரது நண்பரையும் பிடிக்க போலீசார் தீவீர விசாரனையில் இறங்கி உள்ளார்கள்
Tags: இந்திய செய்திகள்