Breaking News

ஆதார் திருத்தம் செய்ய இனி எங்கும் அலைய வேண்டாம் வருகிறது E-Aadhaar ஆப் இனி திருத்தங்கள் செய்வது மிக எளிது

அட்மின் மீடியா
0

ஆதார் திருத்தம் செய்ய இனி எங்கும் அலைய வேண்டாம் வருகிறது E-Aadhaar ஆப் இனி திருத்தங்கள் செய்வது மிக எளிது


ஆதார் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) விரைவில் ஒரு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.E-ஆதார் என்று அழைக்கப்படும் இந்த செயலி மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையின் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற பல தகவல்களை வீட்டிலேயே இருந்தபடியே திருத்த மற்றும் புதுப்பிக்க முடியும். இனி, அட்டையில் உள்ள விபரங்களை ஆதார் புதுப்பிப்புக்கான மையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது என UIDAI தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார்

சுமார் 1 லட்சம் ஆதார் புதுப்பிப்பு இயந்திரங்களில், 2,000 இயந்திரங்கள் இந்த புதிய அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது ஆதார் புதுப்பிப்பு செயல்முறையை எளிதாக்கும். E-ஆதார் செயலியின் முக்கிய அம்சம் என்னவென்றால், வீட்டிலிருந்தே ஆதார் புதுப்பிப்பு வசதி கிடைக்கிறது. 

ஆதாரில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண்ணை போன்ற . QR குறியீடு அடிப்படையிலான ஆதார் பகிர்வு செயலின் மூலம் சாத்தியமாகும்.இந்த செயலி குறித்து UIDAI தற்போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், அது விரைவில் தொடங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback